உத்தரப்பிரதேசத்தில் காரும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் சப்தர்கஞ்ச் பகுதியில் உள்ள பல்ஹாரி கிராசிங் அருகே புதன்கிழமை காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்கள் ஷாபி ஹைதர்(40), அமீர் ஹைதர்(42), அனிஷ் ஹைதர்(45), மற்றும் அடையாளம் தெரியாத நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் பீகாரில் உள்ள தாக்குர்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சப்தர்கஞ்ச் காவல் நிலைய அதிகாரி அபிஷேக் திவாரி கூறினார்.
இதுகுறித்து விசாரித்ததில், நான்கு பயணிகளும் அயோத்தியில் இருந்து லக்னோ நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டு ஆடுகள் காரின் குறுக்கே வந்ததில், கார் ஓட்டுநர் ஆடுகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் போது எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு ஆடுகளும் பலியாகியுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.